கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் வாழ்த்து
தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகள்ஏமாற்றங்கள், துரோகங்கள் அனைத்தையும் தம் பாடல்
வரிகளில் கோடிட்டுக் காட்டியவர் கண்ணதாசன் அவர்கள்.
1944 ஆம் ஆண்டு திருமகள் ஏட்டில்
கார்கூந்தல் பின்னலிட்டுக்
காத்திருந்தேன் உம்வரவை
கடைக் கண்ணால் பார்த்திருந்தேன்.
கண்ணில் தெரிந்திலை நீர்
கனவுலகில் சஞ்சரித்தேன் என்ற வைர வரிகளுடன்
தொடங்கிய அவரின் இலக்கிய பயணம்
பல பாடல்களை, பல இலக்கியங்களையும்,
பல இதிகாசங்களையும் தனது வரிகளில் சுட்டிக் காட்டியவர்.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
அறிந்து கொள்ள...
கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள
”கண்ணதாசன் கதை” என்ற நூலை வாசியுங்கள்
காலமுள்ள வரைக்கும் அவர் பாடல்களை நேசியுங்கள்.
கவியரசு பற்றி நான் எழுதிய கவிதை
எமது ”பேஜ்மேக்கர்” நூலில் காண்க.
கவியரசு கவிதைப் பெண்ணாக எம் கருவின் உருவாகவும்
கொண்டு எழுதிய பாடலது...
மற்றுமொரு கவிதை இதோ
”கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அந்த
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அவன்
மறைகின்ற போது கூட காட்ட மறந்தான்.
கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.”
பாடல்கள் சில கோடி பாடி வைத்தான் - தமிழ்
பாடல்கள் சில கோடி பாடி வைத்தான். - அவன்
பாட்டினை நான் பாட ஏன் மறுத்தான்-
வீணையின் நாதத்தை விரலில் வைத்தான் -என்
விரலின் நாதத்தை ஏன் அறுத்தான்.
வீதியின் கீதத்தை பாட்டில் வைத்தான். என்
விதியின் விளையாட்டில் கவனம் வைத்தான்.
கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.
காதலின் பெருமையைச் சொல்லி வைத்தான் - என்
கோலத்தின் பொருளினை எண்ணிச் சிரித்தான்.
அலைஅலையாய் பொங்குகவி சமைத்தான் - அன்னை
மலையரசியின் நாவில் இடம்பிடித்தான்.
கண்ணன் மீது காதல் கொண்டான் - மாயக்
கண்ணன் மீது காதல் கொண்டான் - இந்தக்
கண்ணனுக்கும் அவனே பெயர் கொடுத்தான்.
கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.
குரு கண்ணதாசன் அவர்களுக்கு எம் சமர்ப்பணம்.
பா.கண்ணன்
கோவில்பட்டி.
தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகள்ஏமாற்றங்கள், துரோகங்கள் அனைத்தையும் தம் பாடல்
வரிகளில் கோடிட்டுக் காட்டியவர் கண்ணதாசன் அவர்கள்.
1944 ஆம் ஆண்டு திருமகள் ஏட்டில்
கார்கூந்தல் பின்னலிட்டுக்
காத்திருந்தேன் உம்வரவை
கடைக் கண்ணால் பார்த்திருந்தேன்.
கண்ணில் தெரிந்திலை நீர்
கனவுலகில் சஞ்சரித்தேன் என்ற வைர வரிகளுடன்
தொடங்கிய அவரின் இலக்கிய பயணம்
பல பாடல்களை, பல இலக்கியங்களையும்,
பல இதிகாசங்களையும் தனது வரிகளில் சுட்டிக் காட்டியவர்.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
அறிந்து கொள்ள...
கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள
”கண்ணதாசன் கதை” என்ற நூலை வாசியுங்கள்
காலமுள்ள வரைக்கும் அவர் பாடல்களை நேசியுங்கள்.
கவியரசு பற்றி நான் எழுதிய கவிதை
எமது ”பேஜ்மேக்கர்” நூலில் காண்க.
கவியரசு கவிதைப் பெண்ணாக எம் கருவின் உருவாகவும்
கொண்டு எழுதிய பாடலது...
மற்றுமொரு கவிதை இதோ
”கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அந்த
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அவன்
மறைகின்ற போது கூட காட்ட மறந்தான்.
கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.”
பாடல்கள் சில கோடி பாடி வைத்தான் - தமிழ்
பாடல்கள் சில கோடி பாடி வைத்தான். - அவன்
பாட்டினை நான் பாட ஏன் மறுத்தான்-
வீணையின் நாதத்தை விரலில் வைத்தான் -என்
விரலின் நாதத்தை ஏன் அறுத்தான்.
வீதியின் கீதத்தை பாட்டில் வைத்தான். என்
விதியின் விளையாட்டில் கவனம் வைத்தான்.
கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.
காதலின் பெருமையைச் சொல்லி வைத்தான் - என்
கோலத்தின் பொருளினை எண்ணிச் சிரித்தான்.
அலைஅலையாய் பொங்குகவி சமைத்தான் - அன்னை
மலையரசியின் நாவில் இடம்பிடித்தான்.
கண்ணன் மீது காதல் கொண்டான் - மாயக்
கண்ணன் மீது காதல் கொண்டான் - இந்தக்
கண்ணனுக்கும் அவனே பெயர் கொடுத்தான்.
கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.
குரு கண்ணதாசன் அவர்களுக்கு எம் சமர்ப்பணம்.
பா.கண்ணன்
கோவில்பட்டி.
No comments:
Post a Comment