Tuesday, June 24, 2014

கவியரசு கண்ணதாசன் பிறந்த நாள் வாழ்த்து

தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகள்ஏமாற்றங்கள், துரோகங்கள் அனைத்தையும் தம் பாடல்
வரிகளில் கோடிட்டுக் காட்டியவர் கண்ணதாசன் அவர்கள்.

1944 ஆம் ஆண்டு திருமகள் ஏட்டில்

கார்கூந்தல் பின்னலிட்டுக்
காத்திருந்தேன் உம்வரவை
கடைக் கண்ணால் பார்த்திருந்தேன்.
கண்ணில் தெரிந்திலை நீர்
கனவுலகில் சஞ்சரித்தேன் என்ற வைர வரிகளுடன்
தொடங்கிய அவரின் இலக்கிய பயணம்

பல பாடல்களை, பல இலக்கியங்களையும்,
பல இதிகாசங்களையும் தனது வரிகளில் சுட்டிக் காட்டியவர்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை
அறிந்து கொள்ள...
கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ள

”கண்ணதாசன் கதை” என்ற நூலை வாசியுங்கள்
காலமுள்ள வரைக்கும் அவர் பாடல்களை நேசியுங்கள்.

கவியரசு பற்றி நான் எழுதிய கவிதை
எமது ”பேஜ்மேக்கர்” நூலில் காண்க.

கவியரசு கவிதைப் பெண்ணாக எம் கருவின் உருவாகவும்
கொண்டு எழுதிய பாடலது...


மற்றுமொரு கவிதை இதோ

”கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான்  - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அந்த
மன்னன் முகம் காண நினைத்திருந்தேன் - அவன்
மறைகின்ற போது கூட காட்ட மறந்தான்.

கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.”

பாடல்கள் சில கோடி பாடி வைத்தான் - தமிழ்
பாடல்கள் சில கோடி பாடி வைத்தான். - அவன்
பாட்டினை நான் பாட ஏன் மறுத்தான்-
வீணையின் நாதத்தை விரலில் வைத்தான் -என்
விரலின் நாதத்தை ஏன் அறுத்தான்.
வீதியின் கீதத்தை பாட்டில் வைத்தான். என்
விதியின் விளையாட்டில் கவனம் வைத்தான்.

கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.

காதலின் பெருமையைச் சொல்லி வைத்தான் - என்
கோலத்தின் பொருளினை எண்ணிச் சிரித்தான்.
அலைஅலையாய் பொங்குகவி சமைத்தான் - அன்னை
மலையரசியின் நாவில் இடம்பிடித்தான்.
கண்ணன் மீது காதல் கொண்டான் - மாயக்
கண்ணன் மீது காதல் கொண்டான் - இந்தக்
கண்ணனுக்கும் அவனே பெயர் கொடுத்தான்.

கங்கைப் புறக் கண்ணன் இங்கிருந்தான் - அவன்
செல்லுகின்ற இடத்தைச் சொல்ல மறந்தான்.

குரு கண்ணதாசன் அவர்களுக்கு எம் சமர்ப்பணம்.
பா.கண்ணன்
கோவில்பட்டி.

Friday, June 6, 2014

grafixkannan-bookreading-2

சிறகுகள் சுமையாவதில்லை - 2

அன்பே பணமே ஆருயிரே:
ஒரு விஷயத்தில் நமக்கிருக்கும் ஆர்வம், தெளிவு ஆகிவற்றை மட்டும் வைத்து அவற்றில் நாம் முன்னேறி விட முடியாது. 
அது தொழிலாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எந்தவொரு செயலாக இருந்தாலும் சரி இதுதான் அடிப்படை. அப்படியானால் அதில் நாம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் நமக்குள் எழுவது இயற்கை. அதற்குப் பதில் நிர்வாகத் திறமை என்பதாகும்.
ஆம் தொழிலாக இருந்தாலும் அதனை நிர்வகிக்கும் தன்மையைப் பொறுத்தே அவற்றின் வெற்றி தோல்விகள் நடக்கின்றன.

இது பண விஷயத்திலும் உண்மையே.

பணம் பற்றி எந்தவிதமான தெளிவுமின்றி நாம் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம். வாழ்க்கையில் பணம் முக்கியமில்லை என்ற வார்த்தையை நம் வீட்டில் இருந்த பெரியவர்களோ அல்லது நமக்குத் தெரிந்தவர்களோ அல்லது நமக்கு வேணடியவர்களோ சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமேலே பணத்தைப் பற்றி தெளிவில்லாமலே பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம் இதுதான் முக்கியமான விஷயம்.

இந்நூல் பணத்தைப் பற்றிய தெளிவினையும் அதைப் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்துகிறது.

பணம் இல்லை என்றால் இன்றைய கால கட்டத்தில் எதையும் நம்மால் சாதிக்க முடியுமா?
முடியாது என்றுதான் நம்மால் சொல்ல முடியும். அத்தகைய சக்தி வாய்ந்த பணத்தைப் பற்றிய விளக்கம் மிக முக்கியமானதும்கூட,
அதனை தெளிவாகவே விளக்குகிறது.

புத்தகத்தின் அட்டையே நமக்குத் தேவையான அல்லது நாம் பணத்தை பற்றி எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆம் பணம் பற்றிய விஷயத்தில் நாம் இன்னும் சிறு குழந்தையாகவே இருக்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்நூல்.

பணத்தைப் பற்றிய அடிப்படைச் செய்திகள் மட்டுமின்றி
பணத்தை எப்படி கையாள வேண்டும் என்பதைப் பற்றியும் நமக்குத் தெள்ளத் தெளிவாக இந்நூல் 
ஆசிரியர் திரு. சுரேஷ் பத்மநாபன் அவர்கள் விளக்குகிறார்.

பணத்தை நாம் எவ்வளவு அலட்சியமாக பார்க்கிறோமோ அல்லது
பணத்தை எவ்வளவுக்கு எவ்வளவு அலட்சியப்படுத்துகிறோமோ அதே
அளவிற்கு பணமும் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றுதான் சொல்லவேண்டும்.
பணைத்தை எப்படி அடைவது என்பதை மட்டும் சொல்லாமல் அதனை எப்படி கையாள வேண்டும் என்றும் இந்நூல் தெளிவாக எடுத்துரைக்கிறது.

1. பணத்தின் முக்கியத்துவம்.
2. பணமும் அடிப்படைத் தேவைகளும்.
3. பணம் சரியாகக் கையாளும் முறையும் குறிப்புக் கையோடும். 
4. பணம் தொடர்பான சம்பிரதாயங்கள். 
5. பணம் சிந்தனையில் முளைவிட்டு நிசமாக மலரும் தொடர் கட்டங்கள். 
6. பணமும் ஊறிப் போயிவிட்ட பழக்கங்களும். 
7. பணமும் சுபாவமும். 
8. பணம் தனிப்பட்ட ஆற்றல்கள். 
9. பணம் செலவும் சேமிப்பும், 
10. பண உத்திகள். 
11. பணமும் குடும்பமும். 
12. பணமும் நிறுவனமும்

என மொத்தம் பன்னிரெண்டு விதமான அத்தியாயங்களில் பணம் பற்றி தெளிவாகவும் ஆணித்தரமாகவும் இந்நூல் ஆசிரியர் விளக்குகிறார்.
பணம் பற்றி மேலும் அறிந்து கொள்ள திரு. சுரேஷ்பத்மநாபன் அவர்கள்
பண பயிலரங்களும் நடத்துகிறார்.


பணம் பற்றிய தெளிவிற்கு
அன்பே ஆரூயிரே பணமே என்ற நூல் பெரிதும் உதவுகின்றன.
நூல் வெளியீடு - கண்ணதாசன் பதிப்பகம்
ஆசிரியர் - சுரேஷ் பத்மநாபன்.